fbpx

தள்ளுவண்டியில் வைத்திருந்த 81 இஸ்திரி பெட்டிகள் மாயம்….! 2 பேரை அதிரடியாக கைது செய்த சென்னை காவல்துறை…..!

சென்னை திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்தவர் ராசு இவர் தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியை வைத்து துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி இரவு தள்ளு வண்டியை திருவல்லிக்கேணி அப்பாவை தெருவில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அதற்கு அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது தள்ளுவண்டியில் இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக டி ஒன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் புகார் வழங்கியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

திருவல்லிக்கேணி d1 காவல் நிலைய குற்ற குறைவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டும் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அஜயன் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர் அவர்களிடமிருந்து 38 இஸ்திரி பெட்டிகள் 12000 நோக்கம் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் வந்துட்டவற்றை வரை முதல் செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜயன் மற்றும் அவருடைய நண்பரான ராமச்சந்திரன் என்பவர் உடன் சேர்ந்து திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அபிராமபுரம், தேனாம்பேட்டை மற்றும் பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தள்ளு வண்டிகளில் இருக்கின்ற இஸ்திரி பெட்டிகளை திருடி இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் விசாரணைக்கு பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Post

சென்னை திருமங்கலம் அருகே…..! மந்திரவாதி கொடூரமான முறையில் படுகொலை…..!

Sat Jul 15 , 2023
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் சிக்கந்தர் (38). இவர் திருமங்கலம் பாடி குப்பம் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.மந்திரிப்பது, மாந்திரீகம் செய்வது போன்ற தொழிலை இவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட திருமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து. அவரது உடலை நீட்டு உபயோக […]

You May Like