மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படும். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 பேருக்கு அடுத்த வாரம் பணி நியமன ஆணை வழங்கப்படும். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
1,021 மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்னும் 2 நாளில் முடிந்து விடும். நீதிமன்றத்தில் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. கலந்தாய்வு நடத்திய பிறகு, சென்னை கிண்டி யில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1,021 மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.