fbpx

சீனாவில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு?

சீனாவில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுருந்தன. அதேபோல், சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.70 கோடியாகவும், இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு, அதாவது சீன மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்திடம் செய்தி ஊடகங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை சீனஅரசு உடனடியாக தளர்த்தியது தான் இந்த அளவிற்கு கொரோனா பரவல் அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளதால் மயானங்களில் பிணங்களை தகனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kokila

Next Post

மெரினா பீச்சில் இளைஞர்களிடம் ஆபாச கேள்வி - யூ டியூபரின் கேமரா, மைக் பறிமுதல் ...

Sat Dec 24 , 2022
சமூக வலைதளங்களில் எந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட யு டியூப் சேனலை நடத்துபவர்களுக்கு வருமானம் வரும். இதனால் தங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கி சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற சேனல்கள் பார்வையாளர்கள், பின்தொடர்பவர்கள், லைக், ஷேர், கமெண்ட்ஸ், சப்ஸ்க்ரைபர் என்ற 6 விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். […]

You May Like