fbpx

பெரும் சோகம்…! நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…! மீட்பு பணி தீவிரம்…!

துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அண்டை நாடான சிரியாவிலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடர்பாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். நேற்று துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இது பிப்ரவரி 6 அன்று தாக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மிக மோசமாக ஒன்றாகும். இது சிரியா, ஜோர்டான், சைப்ரஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து வரை உணரப்பட்டது.

Vignesh

Next Post

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த கள்ளக்காதல்..!! இளம்பெண்ணின் உடலை துண்டு துண்டுகளாக வெட்டி சிதறவிட்ட நபர்..!!

Tue Feb 21 , 2023
ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இவர்களது திருமணம் இரு வீட்டாரின் முன்னிலையில்தான் நடைபெற்றது. இந்நிலையில், இப்பெண் கடந்த மாதம் கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி, கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் கணவர் வீட்டிற்கு செல்லாமல் திடீரென மாயமாகியுள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் […]

You May Like