fbpx

’திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகள்’..!! காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி..!!

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் கட்சி, கூட்டணி பலம் மற்றும் சின்னம் தான் ஜெயிக்கும் என்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாகக் கூறிய அவர், இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் திமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். கூட்டணி பலமாக இருந்து, கூட்டணி தலைமையும் பலமாக இருக்கும் போது அந்த கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும்.

’திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகள்’..!! காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேட்டி..!!

அந்த வரிசையில் திமுக-காங்கிரஸ் உள்ளதாக தெரிவித்த அவர், 21ஆம் நூற்றாண்டில் போஸ்டர்களையும் பேனர்களையும் யாரும் கவனிப்பதில்லை என்றும் செயல்பாடு மட்டும்தான் கவனிக்கப்படுகிறது” எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

Chella

Next Post

அச்சுறுத்தும் தட்டம்மை..!! பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sat Nov 26 , 2022
மும்பையில் தட்டம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டியில் கடந்த மாதம் தட்டம்மை நோயால் குழந்தைகள் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தினர். அந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பாதிப்புள்ளது கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த மத்திய சுகாதாரத்துறை குழு அதிகாரிகள் […]

You May Like