fbpx

மத்திய பிரதேசத்தில் நான்கு ஆண்டுகளில் 34 புலிகள் பலி… அதிர்ச்சி தகவல்…!

நாட்டிலேயே புலிகள் அதிகமாக உள்ள மாநிலமான மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள புலிகளை கணக்கெடுத்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்தியபிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்துள்ளன. இதனால் புலிகள் மாநிலம் என்ற சிறப்பை மத்தியபிரதேசத்திற்கு கிடைத்தது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், புலிகள் அதிகமாக காணப்படும் மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில், 15 புலிகள் உயிரிழந்துள்ளன. கர்நாடகாவை விட இருமடங்குக்கு அதிகமான புலிகள் இறந்திருப்பதால், புலிகள் மாநிலம் என்ற சிறப்பை மத்தியபிரதேசம் இழந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேச வனத்துறையினர், புலிகள் உயிரிழப்பு மர்மமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

அதிக வட்டி ஈட்டக்கூடிய சேமிப்பு திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ முழு விளக்கம்…!

Mon Jan 9 , 2023
பணத்தின் அருமை என்பது வறுமையில் இருக்கும் போது தான் தெரியும் என்பார்கள், ஆகையால் சேமிப்பு மிகவும் அவசியம் ஆகின்றது.  எனவே வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்புத்திட்டங்கள் உள்ளது? அதிக வட்டியுடன், வரிப் பொறுப்பையும் குறைக்கும் அஞ்சலக சேமிப்புத்திட்டங்கள் குறித்து இங்கே முழுமையாக தெரிந்துக் கொள்வோம். தேசிய சேமிப்பு நேர வைப்பு திட்டம்…! தேசிய சேமிப்பு நேர வைப்புத் திட்டம் என்பது என்ன? : மத்திய […]
பெண்களுக்கு சூப்பர் திட்டம்..!! அதிக தொகை சேமிக்க இதை பண்ணுங்க..!! மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!!

You May Like