fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி உயர்வு.. இந்த தேதியில் அறிவிப்பு வெளியாகும்..

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு நவராத்திரியின் போது வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது..

7வது ஊதியக் குழுவின்படி, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய ஆறு மாதங்களுக்கான AICPI குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. இம்முறை, ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. தற்போதைய நிலவரப்படி அகவிலைப்படி 4% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி தற்போது உள்ள 34 சதவீதத்திற்கு பதிலாக 38 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இந்த மாதமே இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.. குறிப்பாக நவராத்திரியின் போது இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சாத்தியமான தேதி குறித்து அரசாங்கம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (AICPI) புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

இந்த வயசுல உனக்கு இதெல்லாம் தேவையா?!,. தனக்கு தானே தூக்கு தண்டனை கொடுத்த மாணவர்..!

Mon Sep 12 , 2022
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பெரகரநாடு அருவங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் செல்லம். இவரது மனைவி புஷ்பா. மகன் வல்லரசு (20), பரமத்திவேலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதல் வருடம் படித்து வந்தார். செல்லம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் புஷ்பா, கேரளாவுக்கு எஸ்டேட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். வல்லரசு கல்லூரி ஹாஸ்பிடலில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அந்த […]

You May Like