முஸ்லிம் சமூக மக்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகை பல நாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த விதத்தில், இந்த ஆண்டு இந்த பண்டிகையை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் நாளை விடுமுறை வழங்கப்பட்டால் சனி, ஞாயிறு உள்ளிட்ட 2️ நாட்களையும் சேர்த்து மொத்தமாக 4 நாட்கள் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விடுமுறை தினமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் மகிழ்வுடன் மாநில அரசின் அறிவிப்பு என்ன? என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.