fbpx

ஜூஸ் டீ ஆம்லெட் ஆகியவற்றை சாப்பிட்டு காசு தர மறுத்து கடைக்காரரிடம் ரகளையில் இறங்கிய போலீஸ்…..! இறுதியில் மேலதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை…..!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் படப்பையில் இருக்கின்ற ஒரு கடையில் பிரட், ஆம்லெட், ஜூஸ், பிஸ்கட், டீ உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்க மறுத்து, கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தாம்பரம் காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் விசாரணை மேற்கொள்ள ஆணையிட்டார். அந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

ஆகவே தகராறு ஈடுபட்ட கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும் 2 பெண் காவலர்கள் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்

Next Post

திமுக தொடர்பாக…..! பொய்யான செய்தியை பரப்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் அதிரடி கைது…..!

Thu Jun 8 , 2023
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த 2021 ஆம் வருடம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த தகவல் நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இந்த செய்தியை தவறாக சித்தரித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், திமுகவை சார்ந்த 5 பேர் சாராயம் காய்ச்சிய போது கைதியின்றி புகைப்படத்தை மார்டின் செய்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் […]

You May Like