fbpx

குட் நியூஸ்…! 41 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு…! உடனே அமல்படுத்த உத்தரவு…!

41 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் 41 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சர்க்கரை நோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்டாசிட்கள், மல்டிவைட்டமின்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி மலிவான விலையில் கிடைக்கும். அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் 143வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உலகளவில் அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்த விலை குறைப்பால் ஏறக்குறைய 10 கோடி நீரிழிவு நோயாளிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விலையை உடனடியாக அனைத்து மருந்து நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகளில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 923 மருந்துகளின் திருத்தப்பட்ட உச்சவரம்பு விலையையும், 65 திருத்தப்பட்ட சில்லறை விலைகளையும் ஏப்ரல் 1 முதல் வெளியிட்டது. அதன் படி, Metiride, Hydoride, Hydoride, போன்ற பல மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட சில மருந்துகளில் அடங்கும்.

Vignesh

Next Post

1 ரூபாய் கூட சேமிக்க முடியவில்லையா? டென்ஷன் வேண்டாம்!! இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க!!

Fri May 17 , 2024
சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு திண்டாடுவதையும், அடுத்த மாத சம்பளத்திற்காக காத்திருப்பதையும் அனுபவித்திருக்கிறோம். நம்முடைய மாத வருவாயில் இருந்து எவ்வளவு பணத்தை சேமிக்கலாம். நம்முடைய அன்றாட செலவுகளை எப்படி குறைத்துக்கொள்வது. சேமிக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 1) செலவு விவரத்தை சோதியுங்கள்: நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கின்ற பணத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை […]

You May Like