கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்களில் 48 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் கீர்த்திவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து, உடல்நலக்குறைவு உள்பட பல காரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்திய மாணவர்களில், 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, அமெரிக்காவில் 108, பிரிட்டனில் 58, ஆஸ்திரேலியா 57, ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அமைச்சர் கீர்த்திவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இந்திய மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்களில் 48 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.