திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கக் கோரியிருந்தனர். சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் , துபாயில் இருந்து வரும் பயணிகளிடம் தங்கம் வைத்திருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சந்தேகத்தின் பேரில் சுமார் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 55 பேர் தங்கம் மற்றும் பேஸ்ட் வடிவிலும் தங்கம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூர் , மலேசியா , துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த அவர்களிடம் இருந்து 200 கிராம் தங்கமாகவும் மீதி தங்கத்தை பேஸ்ட் வடிவிலும் அவர்கள்மறைத்து கொண்டு வந்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 10 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்திருந்தனர். இதன் மதிப்பு 5 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் கடத்தி வந்த நபர்களிடம் யார் மூலம் தங்கம் கொண்டு வந்தார்கள், இதற்கு மூலதனமாக இருப்பது யார் , யாரிடம் இவர்கள் இதை விற்க இருந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.