fbpx

”தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை”..! பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்..!

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு வணிகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து வழங்க வேண்டும் என்று கூறினார்.

”தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை”..! பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்..!

மேலும், நிரந்தர பட்டாசுக்கடை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் உரிமம் வழங்க வேண்டும். நிரந்தர பட்டாசுக்கடை உரிமங்களை புதுப்பிக்க எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். பட்டாசுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்” என்பது போன்ற 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

Chella

Next Post

கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

Sun Aug 14 , 2022
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு பஞ்ச வர்ணம்என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பஞ்சவர்ணம் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில், சிவகுமாருக்கும், பஞ்ச வர்ணத்துக்கும், அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது. இதில் பஞ்சவர்ணம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பஞ்சவர்ணத்தின் […]

You May Like