fbpx

மத்திய அரசு வெளியிட்ட புதிய திருத்தம்……! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி…..!

மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களை போலவே, ஆண் ஊழியர்களுக்கும் பராமரிப்பு விடுமுறை வழங்குவதற்கான, புதிய விதிமுறை திருத்தங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட மாதங்கள் மகப்பேறு விடுமுறை வழங்குவதை போல, குழந்தை பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற முக்கிய பணிகளில் இருந்து, இந்திய அளவில் சேவை வழங்கி வரும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, அகில இந்திய சேவை விதிகள் திருத்தம் செய்யப்பட்டு, ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அகில இந்திய அளவில் சேவைகளை வழங்கும், பெண் ஊழியர்கள் மற்றும் விதவை, விவாகரத்து பெற்ற ஒற்றை ஆண் ஊழியர்களுக்கும் 730 நாட்கள் வரையில், குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படலாம் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் சிரேந்திர சிங் தெரிவித்திருக்கிறார். அத்துடன், இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறை, மத்திய சேவை அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், காத்திருக்கும் வேலைவாய்ப்பு…..! அடேங்கப்பா, ஒரு நாளில் இவ்வளவு சம்பளமா….?

Wed Aug 9 , 2023
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், ஒரு நாளைக்கு, 8000 ரூபாய் சம்பளத்தில் தற்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் domain expert பணிக்கு 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான முழு விவரங்கள் அடுத்தடுத்த பதிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பம் செய்ய ஆர்வமுள்ள நபர்கள், விரைந்து விண்ணப்பம் […]

You May Like