fbpx

8-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. சென்னை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…

சென்னையில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது..

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகங்களிலும்‌, இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்படுகிறது.. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்புகள்‌ பெற்று
வழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ ஆயிரக்கணக்கான இளைஞர்கள்‌ தனியார்‌ துறையில்‌ பணி நியமனம்‌ பெற்று வருகின்றனர்‌.

அந்த வகையில் சென்னையில்‌ உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ அலுவலகங்களும்‌ இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம்‌ ஆலந்தூர்‌ சாலையில்‌ உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ அமைந்துள்ள தொழிசார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை நடைபெற உள்ளது..

இம்முகாமில்‌ 30 வயதிற்கு உட்பட்ட 8- ஆம்‌ வகுப்பு, 10- ஆம்‌ வகுப்பு, 12- ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப பிரிவில்‌ ஏதாவது ஒரு பட்டம்‌ (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. இம்முகாமில்‌ 20-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு...! என்னென்ன தகுதிகள்....? முழு விவரம்...

Fri Jul 22 , 2022
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள, கீழ்காணும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித்தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் 26.07.2022 அன்று அல்லது அதற்கு முன் doplichennai[at]gmail[dot]com மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதிக்கான நிபந்தனைகள்; கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு, வயது 18 முதல் 50 வரை […]
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவராக நீங்கள்...! வெளியான முக்கிய அறிவிப்பு..!

You May Like