fbpx

எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமி..!! லேப் டெக்னீஷியன் செய்த மோசமான காரியம்..!! அலறியடித்து ஓட்டம்..!!

எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீஷியனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசோதனை மையத்திற்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக சிறுமி தனது பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு லேப் டெக்னீஷியனாக வேலை செய்த சூரஜ் ஷிண்டே என்பவர் தனி அறையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பரிசோதனை மையத்தில் தன்னை லேப் டெக்னீஷியன் பலாத்காரம் செய்த விஷயத்தை பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சூரஜ் ஷிண்டேவை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நவ.13ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chella

Next Post

புதிய தொழில் தொடங்க போறீங்களா..? அரசு வழங்கும் நிதியுதவிக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Sat Nov 11 , 2023
தமிழ்நாட்டில் அரசு சார்பில் சுயதொழில் தொடங்குவோருக்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது, நடப்பாண்டில் சுய தொழில் தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு 3 கோடியே 55 லட்சம் தொகையை மானியமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் […]

You May Like