fbpx

#சத்தியமங்கலம் : கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு..!

சத்தியமங்கல பகுதியில் உள்ள மேட்டூரில் ராஜசேகர் மற்றும் அவரது மகன் பாரதி, 19 வசித்து வந்துள்ளார். மகன் தனியார் கல்லுாரியில் பி.பி.எம்., முன்றாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை நாளில் உறவினர் பரணியுடன் தனது, வீட்டு பின்பக்கமாக இருந்த தோட்டத்து கிணற்றில் பாரதி குளிக்க சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாத பாரதி சட்டென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு பரணி கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். நீச்சல் தெரிந்த சிலர் குதித்து தேடினர். 

இந்த நிலையில், பாரதி கிடைக்காததால் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேடியுள்ளார். ஆழமான பகுதியில் சிக்கியிருந்த பாரதியின் இறந்த உடலை மீட்டனர். காவல்துறையினர் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமணைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

கால்பந்தாட்டத் தொடர்: 6000 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக பரபரபப்பு தகவல்?

Mon Nov 21 , 2022
கத்தாரில் கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான பணிகளில் ஈடுபட்ட சுமார் 6000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகின்றது. இதற்கான உரிமத்தைஅந்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. எனவே முன்னேற்பாடு பணிகளை சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. இப்பணிகளில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் […]

You May Like