fbpx

11 வருடங்களாக காத்திருந்த கனவு..! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..! செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற்றம்..!

11 வருடத்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் காணடவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வின்றுள்ளார். உலகில் இருக்கக்கூடிய முன்னணி 7 கிராண்ட் மாஸ்டர்கள் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றனர். இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்று வெற்றிபெறுபவர் தான், தற்போது உலக சாம்பியனாக இருக்கக்கூடியவரிடம், செஸ் உலக சமப்பின் பட்டத்திற்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.

அதன்படி நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் முதல் முறை பங்கேற்ற இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார். இதன் காரணாமாக செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். 5 முறை உலக சாம்பிணக் இருந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு (2013க்கு பிறகு ) எந்த ஒரு இந்திய வீரரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் வரை சென்று வெற்றி பெற்றதில்லை.

ஆனால் தற்போது 11 வருடத்திற்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த 17 வயதான இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

Kathir

Next Post

RTE : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..! அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை..! கடைசி நாள் மீ 20..!

Mon Apr 22 , 2024
தங்கள் பிள்ளைகளை அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இன்று(ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையே கட்டணத்தை ஏற்கிறது. இந்த நிலையில் […]

You May Like