fbpx

உங்க ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க வேண்டுமா…? நாளை நடைபெறும் முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக நாளை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் குறைகளை தீர்க்க தமிழக அரசு ஒவ்வொரு வட்டத்தில் குறைதீர் முகாம்கள் நடத்தபடுமென அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள மக்கள் வரும் 10ம் தேதி மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாமை மக்கள் பயன்படுத்தி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல், செல்போன் எண் மாற்றம் செய்தல், மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கேட்கும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மேலும் இது தொடர்பான புகார்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

Fifa World Cup 2022..!! அரையிறுதி செல்லுமா அர்ஜென்டினா, பிரேசில்..? இன்று காலிறுதிப் போட்டிகள்..!!

Fri Dec 9 , 2022
கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றுகளும், நாக்-அவுட் சுற்றுகளும் நடந்து முடிந்துள்ளன. 16 அணிகள் களமிறங்கிய நாக்-அவுட் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று, பிரேசில், குரோஷியா, நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுக்கல், இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய 8 அணிகள் […]
Fifa World Cup 2022..!! அரையிறுதி செல்லுமா அர்ஜென்டினா, பிரேசில்..? இன்று காலிறுதிப் போட்டிகள்..!!

You May Like