fbpx

தொடரும் கனமழை… இன்றும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்கள். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உதகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

தமிழக முழுவதும் தொடரும் கனமழை.. தமிழக முழுவதும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு...!

Fri Aug 5 , 2022
கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ள நீரினை எதிர்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 3.8.2022 முடிய தமிழ்நாட்டில் 249.5 மி.மீ. மழை […]
முதல்வருக்கு உடல்நலக்குறைவு..! அரசு நிகழ்ச்சிகள் திடீர் ரத்து..! மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்..!

You May Like