fbpx

ஜாலி…! அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!

மயிலாடுதுறையில் இன்று நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

மயிலாடு துறை மாவட்டம் துலாக் கட்ட காவிரியில் ஆண்டு தோறும் நடைபெறும் கடைமுக தீர்த்த வாரி உற்சவத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவது வழக்கம். விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநா தர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் உற்சவர்கள் காவிரியின் இருகரை களிலும் எழுந்தருள உள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் இன்று விடுமுறை தினமாக இருக்கும். விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 19-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vignesh

Next Post

மக்களே...! ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை கோரி வழக்கு...! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை...!

Wed Nov 16 , 2022
ஜல்லிக்கட்டு தடை செய்ய கோரிக்க தாக்கல் செய்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி […]

You May Like