சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் 28 ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. இதல் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக் கொள்கின்றனர். தொடக்க விழா மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரங்களை பறைசாற்றும் கலை விழா் நடைபெறும். இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 800 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். 187 நாட்டிள் இருந்து 1500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். பல மாநில முதல்வர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.மின்சார வசதி, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த 4 மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தொடக்க விழா சென்னையில் நடப்பதால் 28 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த 4 மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கபடுகிறது. வெளிநாட்டு வீரர்களுக்கு விமான நிலையத்திலேயே வரவேற்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.