fbpx

லேடீஸ் ஹாஸ்டலில் குளியலறை வீடியோ எடுத்த பழைய குற்றவாளி! ஆபாச வீடியோக்களை பார்த்து காவல்துறை அதிர்ச்சி!

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த திருடன் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை நகரில் பெண்களுக்கென்று தங்குவதற்கு ஏராளமான லேடிஸ் ஹாஸ்டல்கள் உள்ளன வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் படிப்பதற்காகவும் வேலை செய்வதற்காகவும் சென்னையில் தங்கியிருக்கும் பெண்கள் இந்த லேடீஸ் ஹாஸ்டல்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். வேளச்சேரியில் இயங்கி வரும் பெண்கள் தனியார் விடுதி ஒன்றில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட 50 பேர் தங்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி வேளச்சேரி மகளிர் விடுதியின் நிர்வாகி காவல்துறையை தொடர்பு கொண்டு சில நாட்களுக்கு முன் விடுதிக்குள் திருட நுழைந்த மர்ம நபர் பெண்களின் அந்தரங்கங்களை அவர்கள் குளிக்கும் போது வீடியோவாக எடுத்துச் சென்றதாக தெரிவித்திருக்கிறார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியது. உடனடியாக சிறப்பு படை அமைத்து தேடிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பழைய குற்றவாளியான பெசன்ட் நகர் துரைராஜ் கைது செய்தனர். இவன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்திருக்கிறான். திருடுவதற்காக பெண்கள் விடுதியை நோட்டமிட்ட போது அங்கு அதிகாலையில் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை கவனித்த இந்தத் திருடன் தனது செல்போனில் அவற்றை படம் பிடித்து வைத்திருக்கிறான். அவனது செல்போனை கைப்பற்றி காவல் துறையினர் பரிசோதனை செய்ததில் ஏராளமான பெண்களை படம் பிடித்து வைத்திருப்பது தெரிய வந்தது. பின்னர் அவனையும் செல்போனையும் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

Baskar

Next Post

"என்னால உன்ன லவ் பண்ண முடியாது" காதலிக்க மறுத்த 18 வயது பெண்ணுக்கு 17 இடத்தில் கத்திக்குத்து!

Sun Mar 26 , 2023
குஜராத்தை சார்ந்த 17 வயது சிறுமி தன்னுடைய உறவுக்கார பையனால் குத்தி படுகாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வீட்டில் தனியாக இருந்த 17 வயது பெண்ணை 23 வயது இளைஞர் ஒருவன் 18 முறை கத்தியால் குத்தி இருக்கிறான். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் தற்போது ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை […]

You May Like