fbpx

மத்திய ரிசர்வ் படை காவலர் அறைந்ததால், உயிரிழந்த நபர்….! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை….!

மகாராஷ்டிராவில் கார் ஹெட் லைட் உடைந்ததால், அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்ட ஒரு நபரை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் அரைந்ததில், அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து ,மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் மீது, வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, நாக்ப்பூர் பகுதியில் மாதா கோவில் அருகே நிகில் குப்தா என்பவர் தன்னுடைய சகோதரியை பார்ப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது, தன்னுடைய காரை அவர் பார்க் செய்தபோது, வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சம் அதே பகுதியைச் சேர்ந்த முரளிதர் என்பவரின் முகத்தில் பட்டதாக தெரிகிறது.

ஆகவே ஹெட் லைட் வெளிச்சம் தான் மீது விழாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு, முரளிதரன் ரிசர்வ் படை வீரரிடம் பணிவாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த காவலர் அவரை ஓங்கி அறைந்து உள்ளார்.

ஆகவே சுருண்டு விழுந்த முரளிதர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு, இந்த சம்பவம் குறித்து மத்திய ரிசர்வ் படை காவலர் மீது, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளில், பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Post

குட் நியூஸ்..!! மின் கட்டணம் குறைகிறதா..? முதலமைச்சருடன் அமைச்சர் அவசர ஆலோசனை..!!

Mon Sep 25 , 2023
மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறுகையில், ”மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுகுறித்து அரசிடம் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. மின்கட்டணம் அடிக்கடி உயர்த்தப்படுவதால், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. மின்கட்டண முறைகளை மாற்றி […]

You May Like