fbpx

கொழுந்தியா வீட்டுக்கு விருந்துக்கு சென்ற கணவன் மனைவி! செம்ம ஸ்கெட்ச் போட்ட சகல! கொத்தாக தூக்கிய காவல்துறை!

மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவரை விருந்துக்கு அழைத்த நபர் அதன் பிறகு செய்த காரியம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாப்பூர் அப்பாசாமி தெருவை சார்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் நரேந்திரனுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விருந்திற்காக தனது மனைவியின் அக்கா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று இருக்கிறார் நரேந்திரன். விருந்து சாப்பிட்டுவிட்டு அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது மயிலாப்பூர் வரை செல்ல வேண்டும் உங்களது வீட்டு சாவியை கொடுங்கள் என கேட்டிருக்கிறார் நரேந்திரன் மனைவியின் அக்கா கணவர் சுரேஷ். இதனைத் தொடர்ந்து அவர்களும் சாவியை கொடுத்துள்ளனர்.

சாவியை வாங்கிக் கொண்டு மயிலாப்பூர் சென்ற சுரேஷ் அவர்களது வீட்டிலிருந்த பத்து பவுன் நகையை எடுத்துவிட்டு கோயம்புத்தூர் சென்றுள்ளார். இந்நிலையில் தாலி பிரித்து போடும் நிகழ்விற்காக தங்களது வீட்டிற்கு வந்திருக்கின்றனர் புதுமண தம்பதிகள். அப்போதே வீட்டில் பீரோ திறந்திருப்பது கவனித்தவர்கள் அதிலிருந்த பத்து பவுன் நகை காணாமல் போயிருப்பதை அறிந்தனர். இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதித்துப் பார்த்ததில் அவரது மனைவியின் அக்கா கணவர் சுரேஷ் தான் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பது தெளிந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷின் செல்போன் சிக்னலை வைத்து அவரை தேடியதில் கோயமுத்தூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோயம்புத்தூர் சென்று அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

பெண்ணை கொன்று இதயத்தை உருளைக்கிழங்குடன் சமைத்து பரிமாறிய அமெரிக்காவின் சைக்கோ கொலைகாரன்! ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

Fri Mar 17 , 2023
அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து அவரது இதயத்தை சமைத்து உணவாகப் பரிமாறிய சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சார்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருபது வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனாலும் மூன்று வருடங்களில் விடுதலையாகி தனது அத்தை மற்றும் மாமாவுடன் வசித்து […]

You May Like