fbpx

அலமாரியில் மம்மியாக மாறிய டாடி! அதிர்ச்சியில் மனைவி மற்றும் காவல்துறை!

அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை எட்டு மாதங்கள் கழித்து வீட்டின் அலமாரியில் சடலமாக கண்டிருக்கிறார் மனைவி இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் பகுதியைச் சார்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ். 53 வயதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி வாழ்ந்த வீட்டை 15 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது வீட்டிலிருந்து ஒரு துர்நாற்றம் வந்தது ஆனால் அது எந்த வாசம் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் நடந்து 8 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் கிறிஸ்மஸ் மரங்களை வைப்பதற்காக அலங்கார வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார் ரிச்சர்ட் மனைவி. அப்போது அவர் அலமாரியில் கிறிஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்க பயன்படும் பொருட்களை தேடும் போது மம்மி போன்று
சுற்றி வைக்கப்பட்ட உடலைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் வந்து அந்தச் சடலத்தை கைப்பற்றி சோதனை செய்து பார்த்ததில் சடலமாக மீட்கப்பட்ட நபர் காணாமல் போன ரிச்சர்ட் மேட்ஜ் என்பது தெரிய வந்தது. அவரது உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால் உடல் சிதைந்த பின்பும் துர்நாற்றம் வீசவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். நடந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது ரிச்சர்ட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Baskar

Next Post

1000 நாய்களை பட்டினிப்போட்டு சாவடிந்த முதியவர், சாக்குப் பைகளில் நாயின் உடல்கள்! அதிர்ச்சி சம்பவம்!

Thu Mar 9 , 2023
தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என ஒரு பகுதியில் தேடிக் கொண்டிருந்தபோது அப்பகுதி முழுவதும் இறந்த நாய்களின் சிதைந்த உடல்கள் […]

You May Like