fbpx

#திருநெல்வேலி : ஒன்றறை மகளை கொலை செய்து விட்டு தான் தூக்கில் தொங்கிய தாய்.. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்..!

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவில் மகேந்திரன்(30) என்பவர். தன் தந்தையோடு சேர்ந்துகொண்டு பால் வியாபாரம் செய்து வருகின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த பிரவீனா என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் தம்பதிக்கு ஒன்றரை வயது நிரம்பிய அகிமா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினத்தில் மகேந்திரன் தன்னுடைய பெற்றோருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். 

பிரவீனா மற்றும் அவரின் ஒன்றரை வயது மகள் அகிமாவும் ஒரே சேலையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.விசாரணையில், “மகேந்திரன் மற்றும் அவரின் பெற்றோருக்கும் இடையேவும் இதனால் பிரவீனாக்கும் இடையே குடும்பச் சண்டை அதிகளவில் நடந்துள்ளது. 

இந்த நிலையில் மிகுந்த மன வேதனையில் வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சேலையைப் போட்டு இறுக்கி, அதே சேலையின் மற்றொரு முனையில் தானும் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 

Baskar

Next Post

அமாவாசை இரவு சிறப்பு பூஜை..!! மகள்களை அழைத்து வந்த தாய்..!! சாமியார் செய்த லீலை..!! சிக்கியது எப்படி?

Fri Nov 25 , 2022
சிறப்பு பூஜை என்ற பெயரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் மானகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்து குறி சொல்லும் தொழில் செய்து வந்துள்ளார். ராமகிருஷ்ணனிடம் குடும்ப பிரச்சனைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் குறி கேட்க வந்திருக்கிறார். இது தொடர்பாக அடிக்கடி வந்து சென்றபோது […]
அமாவாசை இரவு சிறப்பு பூஜை..!! மகள்களை அழைத்து வந்த தாய்..!! சாமியார் செய்த லீலை..!! சிக்கியது எப்படி?

You May Like