டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 23-ம் தேதி தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லியின் துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.