fbpx

தூத்துக்குடியில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து..!

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள்சாலை, குமாரசாமி நகர் 2 வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் அருணாகரண் (38). இவர் நேற்று மாலை திருச்செந்தூர் சாலை ஸ்பிக் நகரில் நடந்து வரும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அருணாகரன் மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் தலை உள்ளிட்ட உடல் முழுதும் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அருணாகரன் இரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன்ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. பாலாஜிசரவணன் உத்தரவை மீறி, போக்குவரத்து விதிகளுக்கு மாறாக தூத்துக்குடி மாநகரச் சாலைகள் திருச்செந்தூர் சாலை, துறைமுக சாலைகளில், வலதுபுற வாகன பயணம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சைலன்ஸர் இல்லாமல் பேரிரைச்சலுடன் வாகனங்கள் ஓட்டப்படுகிறது.

இதனால் தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. தூக்கம் இல்லாத லாரி ஓட்டுனர்களாலும், நெருக்கடியான பகுதியில் உள்ள லாரி செட்டுகளாலும் தொடர்ந்து விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Maha

Next Post

11 வயதில் 10 லட்சம் வருமானம், 12 வயதில் ரிட்டையர்மென்ட்..யார் இந்த குட்டி பிஸ்னஸ்மேன்..!

Sun Jul 30 , 2023
இன்றைய இளம் தலைமுறையின் மிகவும் துடிப்புடனும், மிகுந்த அறிவுடன் இருக்கும் வேளையில் பலர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வைத்து இயங்கி வருகின்றனர். யூடியூப் வாயிலாக பல கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கும் பல குழந்தைகள் இருக்கும் வேளையில் இந்த 12 வயது சிறுமி ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் தனக்கென ஒரு அடையாளரத்தை பெற்று மில்லியன் டாலர் சம்பாதிக்கும் நிலையில் 12 வயதில் ரிட்டையர்மென்ட் பெற முடிவு செய்துள்ளது. இன்று Early Retirement […]
’புதிதாக என்ன தொழில் செய்யலாம்..? சூப்பர் டிப்ஸ்..!! உடனே இதை பண்ணுங்க..!!

You May Like