fbpx

#விழுப்புரம் : நண்பனின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியில் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் நூறு உயிரை காக்கும் நற்செயல்..!

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் மின்சார துறையில் லைன் மேன் பழனி மற்றும் மகன் ராஜகுரு வசித்து வந்துள்ளனர்.

ரத்தப் புற்றுநோய் காரணமாக மகன் சென்ற ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் தோழர்கள் மற்றும் கிராம மக்கள் 40 கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்துள்ளனர்.

இறந்தவரை அடுத்த நாளே மறக்கும் காலகட்டத்தில் நண்பரின் நினைவு நாளை முன்னிட்டு மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் ரத்த தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவரது நண்பர்கள் மட்டும் அல்லாமல் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் வந்து ரத்த தானம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

17 ஆண்டுகளுக்கு பிறகு இறந்த மகனை பார்த்த தாய்..!! உறவுக்கார பெண்ணின் சதி அம்பலமானது..!!

Tue Nov 15 , 2022
ஈன்றெடுத்த தாயிடம் இருந்து பிரிந்துச் சென்ற குழந்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பெற்றோரிடம் சேருவது குறித்த படங்கள் பல வந்திருப்பதை பார்த்திருப்போம். சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் தங்களது பிள்ளைகளையும், பெற்றோரையும் கண்டறிந்தது குறித்த செய்திகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால், இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு கண்டறிந்த சுவாரஸ்யமான அதிர்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவின் மாகாணத்தில் நடந்திருக்கிறது. திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவத்தின் […]
சீனாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இறந்த மகனை பார்த்த தாய்..!! உறவுக்கார பெண்ணின் சதி அம்பலமானது..!!

You May Like