தனது கை குழந்தை இறந்த சோகத்தில் தனது மூத்த மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் தொடுப்புழாவை சார்ந்தவர் லிஜா வயது 38. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை குழந்தை அழுததை தொடர்ந்து அதற்கு தாய்ப்பால் புகட்டியிருக்கிறார் லிஜா
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என அவரிடம் தெரிவித்திருக்கின்றனர். தன்னுடைய ஒரு மாத குழந்தை தன் கண் முன்னே இருந்ததால் மிகுந்த அதிர்ச்சியிலும் மனவேதனை நிலையம் இருந்திருக்கிறார் அந்த தாய். இதனைத் தொடர்ந்து யாருடனும் பேசாமலே இறுக்கமான மனநிலையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென தனது 7 வயது மகனுடன் அப்பகுதியில் உள்ள கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து உடலை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தன் ஒரு மாத கைக்குழந்தை கண் முன்னே இறந்த சோகத்தில் தனது இன்னொரு மகனையும் கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.