fbpx

“நிர்வாணமாக கட்டி போட்டு உடலெங்கும் மிளகாய் பொடி……” மகளின் கண் முன்னே நடந்த மனதை உலுக்கிய கொடூரம்!

மகளின் கண் முன்னே தாயை நிர்வாணமாக்கி அவரது உடல் பாகங்களில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ள கணவனை பற்றிய செய்தி இலங்கையில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை நாட்டின் அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் குடித்து விட்டு வந்து தன்னை வன்கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருக்கிறார். தனது கணவர் தன்னுடைய கை கால்களை கட்டி நிர்வாணமாக்கி உடலில் மிளகாய் பொடிகளை தூவி கொடுமை செய்ததாக தெரிவித்திருக்கிறார் அந்த பெண்.

மேலும் இந்தக் கொடுமையின் உச்சகட்டமாக அவர்களது பதினோரு வயது மகளின் கண் முன்னே இந்தக் கொடுமையை அரங்கேற்றி இருக்கிறார் அவரது கணவர். இதனால் அவரது மகளும் மிகவும் அசௌகரியமாக இருப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். தற்போது அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவருடைய பெற்றோரிடம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணினுடைய கணவர் காவல்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காக ஊரை விட்டு ஓடி விட்டார். அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Baskar

Next Post

5 மாத குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்த தந்தை..!! கை, கால்களை முறித்து வெறிச்செயல்..!!

Sun Mar 5 , 2023
அசாம் மாநிலம் கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர், தன்னுடைய 5 மாத மகனின் கை, கால்களை முறித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையின் இரு கைகளையும் முறித்து ஒரு காலையும் உடைத்துள்ளார். தொடர்ந்து குழந்தை இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. […]
5 மாத குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்த தந்தை..!! கை, கால்களை முறித்து வெறிச்செயல்..!!

You May Like