மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் இந்தி தெரியாது என தெரிவித்த காரணத்தால், பாதுகாப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் அவர்களை காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சித்தார்த், அரசியல் சார்ந்த கருத்துகளை அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை, மதுரை விமான நிலையம் வழியாக விமான பயணம் மேற்கொண்ட நடிகர் சித்தார்த்தின் பெற்றோர்களின் உடமைகள் மற்றும் லக்கேஜை மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அதனுள் நாணயங்கள் இருந்ததால் அதனை அதிகாரிகள் அகற்றுமாறு இந்தி மொழியில் தெரிவித்துள்ளனர். றச் சொன்னதால், அதற்கு சித்தார்த்தின் பெற்றோர்கள் இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலாகிய நிலையில், வழக்கம் போல் அந்த பதிவை சித்தார்த் டெலிட் செய்துவிட்டார்.