fbpx

25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்தேன்..! பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவிப்பு…!

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது விலகல்‌ கடிதத்தில்; மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை.‌ பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

தான் திரைத்துறை துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாகக் கூறினார்.

ஆனால் உதவி செய்வதாகக் கூறி எனது சொத்துகளை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். தற்பொழுது அன்பழகனுக்கு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடடத்திற்கு அவர் தனது விலகல் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

Vignesh

Next Post

அரிசி விலை மீண்டும் உயர்வு..!! இப்படியே போன இந்த நிலைமை தான்..!! பொதுமக்கள் வேதனை..!!

Mon Oct 23 , 2023
கடந்த சில நாட்களாகவே, காய்கறிகளின் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மக்களின் அன்றாட உணவுக்கு பயன்படும், அரிசியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அரிசியின் விலை, சில மாதங்களாகவே உயர்ந்து வரும் நிலையில், இப்போது இன்னும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதற்கு பருவமழை தான் காரணம் என்கின்றனர். மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் […]

You May Like