பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது விலகல் கடிதத்தில்; மிகுந்த வேதனையுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பாஜக வளர்ச்சிக்காக கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையுடன் உழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் எனக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. பாஜகவின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தும் எனக்கு கட்சியில் ஆதரவு இல்லை என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.
தான் திரைத்துறை துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த, கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாகக் கூறினார்.
ஆனால் உதவி செய்வதாகக் கூறி எனது சொத்துகளை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். தற்பொழுது அன்பழகனுக்கு பாஜகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக உள்ளதாகவும் குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடடத்திற்கு அவர் தனது விலகல் கடிதத்தை அனுப்பி உள்ளார்.