fbpx

இந்த தேதிக்கு பிறகு ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வாங்க முடியாது.. மத்திய அரசு அறிவிப்பு..

பொதுமக்கள் வரும் மார்ச் 31க்கு பிறகு, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வாங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

ஹால்மார்க் என்பது தங்கத்திற்கான தூய்மை சான்றிதழ் ஆகும். கடந்த 2021 ஜுன் 16 முதல் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவற்றுக்கு கட்டாய ஹால்மார்க்கிங் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.. அதாவது, ஹால்மார்க்கிங் கூடுதல் தூய்மை சான்றிதழாக செயல்படும். இது தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது… தங்க ஆபரணங்களை வாங்கும் போது நுகர்வோர் ஏமாற்றப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்கு இது உதவும்..

இந்நிலையில் ஹால்மார்க் பிரத்யேக அடையாளம் இல்லாத தங்க நகைகள் மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு அனுமதிக்கப்படாது என நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 4 இலக்கங்கள் மற்றும் 6 இலக்கங்கள் கொண்ட ஹால்மார்க்கிங் தொடர்பாக நுகர்வோர் மனதில் நிலவும் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1, 2023 முதல், 6 இலக்க எண்ணெழுத்து ஹால்மார்க்கிங் மட்டுமே அனுமதிக்கப்படும். ஹால்மார்க் இல்லாமல் தங்கம் அல்லது தங்க நகைகளை விற்க முடியாது. ஹால்மார்க் தனித்துவ அடையாள (HUID) எண் என்பது 6 எழுத்துகளின் ஆல்பா-எண் குறியீடாகும். இதன் மூலம், ஒரு நபர் வாங்கும் தங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நகையிலும் இந்த எண் இருக்க வேண்டும். எண்ணைப் பயன்படுத்தி இதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒருவர் பெறலாம்.

தற்போதைய நிலவரப்படி, நாட்டில் 1338 ஹால்மார்க்கிங் மையங்கள் உள்ளன. முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில், 32 நகரங்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இப்போது, மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 288 ஆகிவிடும். இந்தப் பட்டியலில் மேலும் 51 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Maha

Next Post

சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் வாங்கிய முதல் கார்…..! உங்கள் பார்வைக்கு….!

Sat Mar 4 , 2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கி இருக்கிறது. தற்சமயம் பலரும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக இருந்து வருகிறார்கள். தெலுங்கு, ஹிந்தி என்று மற்ற மொழிகளிலும் பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்து பாடி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் நடத்தும் கச்சேரிகளிலும் அதிகமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான பாடகர்கள் தான் இடம்பெறுகிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் […]

You May Like