fbpx

மீண்டும் ‘Work From Home’..!! வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தும் முக்கிய நிறுவனங்கள்..!!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யவும், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தி வைக்கவும் சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சீனாவில் தற்போது பிஎஃப் 7 (Omicron BF.7) என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா 4ஆவது அலை ஏற்பட்டால் போக்குவரத்து, சுற்றுலா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளிலுள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வீட்டிலிருந்து பணி செய்யும் முறைக்கு (Work From Home) மாற்ற ஆலோசித்து வருகின்றன. அதுபோலவே வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியும் மந்தமடைந்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் ‘Work From Home'..!! வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியை நிறுத்தும் முக்கிய நிறுவனங்கள்..!!

பணிக்கு ஆட்கள் எடுக்கும் ஸ்டாலின் சாஸ் நிறுவனத்தின் பங்குதாரர் மாலா சவ்லா கூறுகையில், “கொரோனா குறித்த தகவல்கள் மீண்டும் அதிகரித்து வருவதால் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணிகளை நிறுவனங்கள் குறைத்துள்ளன. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். என்றாலும் உற்பத்தி மற்றும் நுகர்வோர் துறையினர் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பணியைத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர்” என்றார். என்றாலும் கூட இந்தியாவில் கொரோனா தடுப்பு செலுத்தியதால் மக்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கொரோனா பரவல் பெரிய அளவில் இருக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Chella

Next Post

’Brain-Eating Amoeba’..!! மனித மூளையை உண்ணும் கொடூர நோய்..!! தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!!

Tue Dec 27 , 2022
தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபா நோயால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக, மூளையை உண்ணும் அமீபா (Brain-Eating Amoeba) எனும் அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கி இருந்து விட்டு, கடந்த 10ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய 50 வயது நபர் மறுநாளே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, தலைவலி, […]
’Brain-Eating Amoeba’..!! மனித மூளையை உண்ணும் கொடூர நோய்..!! தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!!

You May Like