முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அதிக வேலிடிட்டி, டேட்டா நன்மைகள், அன்லிமிடெட் அழைப்புகளுடன் ஏர்டெல் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை எடுப்பவர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் பேக்கில் அதிகபட்ச டேட்டா வரம்பு 30 ஜிபி ஆகும். பயனர் அந்த 30 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிஎஸ் வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்தலாம். ஆனால், இந்த ரூ. 99 டேட்டா பேக் பயனர்கள் ஏர்டெல் செயலியில் அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஏர்டெல் 5ஜி பிளஸ் கிடைக்கும் பகுதிகளில் பயனர்கள் 5ஜி இணையத்தைப் பயன்படுத்தலாம்.
5ஜி வசதி இல்லாத பகுதிகளில் உள்ள பயனர்கள் ரூ. 99 டேட்டா பேக்கைப் பயன்படுத்தலாம். மறுபுறம், வோடபோன் ஐடியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, ப்ரீபெய்டு பயனர்கள் ரூ. 199 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள் 50ஜிபி வரை டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகின்றன. ஏர்டெல்லின் இந்த ரூ.99 அன்லிமிடெட் டேட்டா திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.