fbpx

Vedio | மாடியில் இருந்து விழுந்த ஏசி.. நொடியில் உயிரிழந்த இளைஞர்..!! – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

மூன்றாவது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் தவறுதலாக கீழே விழுந்ததில் 18 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் தோரிவாலா பகுதியில் தேசபந்து குப்தா சாலையில் வசித்து வருபவர் 18 வயது ஜித்தேஷ். சம்பவதன்று, தெருவில் ஸ்கூட்டர் ஒன்றில் அமர்ந்தபடி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஏசி ஜித்தேஷ் தலையின் மீது விழுந்தது. அதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். அருகில் நின்ற நண்பர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 7 மணிக்கு நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; தப்பிச் சென்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்..!! கன்னியாகுமரியில் பரபரப்பு

English Summary

An 18-year-old boy died when an air conditioner accidentally fell from the third floor.

Next Post

'முதல்வரின் மாஸ்டர்மைண்ட்' இனி இவரு தான் ஸ்டாலின் RIGHT HAND..!! யார் இந்த முருகானந்தம்? கடமைகள் என்னென்ன?

Mon Aug 19 , 2024
The notification regarding the new Chief Secretary has been released today. Accordingly, Na. Muruganandam, one of the secretaries of the Chief Minister, has been appointed as the 50th Chief Secretary of the Tamil Nadu Government.

You May Like