fbpx

சென்னையில் 18 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்…! அண்ணாமலையால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்…!

பட்டியல் சமூகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ராதிகா என்பவரை சிகரெட்டால் சூடு வைத்தும் கடுமையாக தாக்கியும் துன்புறுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது.

மேலும் அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

குழந்தையின் அழுகையை நிறுத்தும் குழந்தை பொங்கல் பற்றி தெரியுமா.? 

Fri Jan 19 , 2024
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் அமைந்துள்ள கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக வினோத வழிபாடு ஒன்றை அம்மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்தப் பெண் தெய்வம் குழந்தைகளின் நோய் நொடியை போக்கி, அவர்களை அழுகாமல் பார்த்துக் கொள்வதாக நம்புகின்றனர். அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவதை தான் குழந்தை பொங்கல் என்று இன்றளவும் அவர்கள் கொண்டாடி […]

You May Like