டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில் எல்லாவற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய டெக்னாலஜி வலம் வருகிறது. அதில் தற்போது திருமண விழாக்களில் கூட ப்ரீ மற்றும் போஸ்ட் திருமண போட்டோ பிடிப்புகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
மேலும் , வெட்டிங் போட்டோ ஷூட்களில் எதிர்பாரத விதமாக சில சம்பவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி வருகிறது. தற்போது அவ்வாறு ஒரு வீடியோவனது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கின்றது. திருமண போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த தம்பதிகளை யானை ஒன்று தென்னை மட்டையை எறிந்து அடித்து விரட்டியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது.