கோயமுத்தூர் மாவட்டத்தின் வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 25 வயதில் மதன்குமார் என்ற மகன் இருந்திருக்கிறார். ரம்மி விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் ஆன்லைன் மூலமாக அடிக்கடி தம்பி விளையாட்டில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக இவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கண்பார்வையும் அங்க ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த விளையாட்டின் காரணமாக இவருக்கு பெரும்பளவில் பொருளாதாரம் நஷ்டமும் ஏற்பட்டதாக தெரிகிறது. உடல் நலமும் பாதிக்கப்பட்டு பொருளாதார நஷ்டமும் அடைந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்த மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் ஆளும் அரசு இது நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அவை ஆளுணரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.