fbpx

குஷ்பு பதவி விலக அண்ணாமலை தான் காரணம்? வெளியான பரபரப்பு தகவல்..!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வகித்த குஷ்பு, பொறுப்பில் இருக்கும்போது, கட்சி சார்பாக எந்த ஒரு நிகழ்விலும் என்னால் பங்கேற்க முடியாது. இதன்காரணமாகவே, பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அந்த பேட்டியில், பாஜகவுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது. ஆனால், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியால், தேசிய அளவிலும் தமிழ்நாட்டில் நடக்கும் டிவி விவாதங்களிலும் என்னால் பங்கேற்க முடியவில்லை. இப்போது நான் ஃப்ரீயாகிவிட்டேன். இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலக எனக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.

என் பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்தான். கட்சி பணிகளில் இல்லாத போதே நான் நிறைய பேசியிருக்கேன். இப்போது கட்சி சார்பில் பேசினால் எப்படியெல்லாம் பேசுவேன் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பயம் இருக்கட்டும். மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கும். அந்த பயத்தால்தான் திமுகவினர் பேசி வருகின்றனர். பேசட்டும். இனிதான் விளையாட்டே ஆரம்பிக்க போகுது” எனக் கூறி அதிரடியாக அரசியலில் இறங்கினார்..

இந்நிலையில் குஷ்பு பதவி விலக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் காரணம் என தகவல் வெளியாகிறது. பாஜக-வில் இணைந்த சரத்குமார் ராதிகாவிற்கு அண்ணாமலை அதிக அளவில் முக்கியதுவம் கொடுப்பதை குஷ்பு விரும்பவில்லை எனவும்,, இப்படியே இருந்தால் நாம் ஒரங்கட்டப்படுவோம் என எண்ணியதால், குஷ்பு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியலில் இறங்கியதாக கூறப்படுகிறது.

Read more; அச்சுறுத்தும் Mpox வைரஸ்..!! நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்..!!

English Summary

Annamalai is the reason for Khushbu’s resignation? Exciting information released..!!

Next Post

உயர்ந்த ஆளுமை.. பன்முக தன்மை கொண்டவர் கலைஞர் கருணாநிதி..!! - பிரதமர் மோடி புகழாரம்

Sun Aug 18 , 2024
Prime Minister Narendra Modi has hailed artist Karunanidhi as a multi-faceted man as the coin launch ceremony takes place in Chennai today.

You May Like