fbpx

செய்தியாளர்களிடம் எகிறிய அண்ணாமலை..!! கமலாலயத்தில் பரபரப்பு..!! வலுக்கும் கண்டனங்கள்..!!

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது என ஆவேசமாக கேட்டார். அண்ணாமலையில் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் எகிறிய அண்ணாமலை..!! கமலாலயத்தில் பரபரப்பு..!! வலுக்கும் கண்டனங்கள்..!!

அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் பணி குறித்து அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. நிதானமற்ற போக்கு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறை மிரட்டல் போக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாக என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

விடாது துரத்தும் மழை தமிழகத்தில் அடுத்த 5️ நாட்களுக்கு மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்!

Wed Jan 4 , 2023
தமிழக பகுதிகளில் நிலவி வரும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், இன்றைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல நாளையும், நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பொதுவாக வறண்ட வானிலையே […]

You May Like