அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்), 2 மணி நேரம் கணினி வழியில் மருந்தியல் தேர்வும் நடைபெறும்.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்சி-ஏ, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.