fbpx

அசத்தல்…! ராணுவத்தில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு மேலும் வேலை வாய்ப்பை நீட்டிக்கும் முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தார்.

உள்நாட்டு ராணுவத்தின் பெண் அதிகாரிகள் இனி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணிபுரியும் பொறியியல் பிரிவிலும் புது டெல்லியில் உள்ள உள்நாட்டு ராணுவ தலைமையகத்திலும் தேவைகளுக்கேற்ப பணி அமர்த்தப்படுவார்கள். இனி பெண் ராணுவ அதிகாரிகளும், ஆண் அதிகாரிகளைப் போன்று சவாலான பயிற்சிகளையும், பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர்.

Vignesh

Next Post

Local Holiday..!! மே 12ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Mon May 8 , 2023
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மே 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால், இந்த விழாவில் அதிக அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நாளான தேரோட்டம் மே 12ஆம் தேதி […]

You May Like