fbpx

ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகள்…! காவல்துறை விசாரணைக்கு உத்தரவு…! அரசு அதிரடி நடவடிக்கை…!

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏதும் உள்ளதா என போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, நாடு முழுதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வெளியான பட்டியலில் தமிழக அரசு சார்பில், 390 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருதுக்கான பட்டியலை தேர்வு செய்வதில், பள்ளிக்கல்வி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் விருது பட்டியல் இரண்டு நாட்கள் முன்பு தயாரான நிலையில், தேர்வானவர்களின் விபரங்கள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள் மீது புகார்கள், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளனவா என, ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா என்று விசாரித்து உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மணிப்பூரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை கல்லூரிகள் திறப்பு...! முதல்வர் அறிவிப்பு...!

Tue Sep 5 , 2023
மணிப்பூரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. மணிப்பூரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு செப்டம்பர் 6 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். முதலமைச்சர் தனது அறிவிப்பில், கடந்த சில நாட்களாக, மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் வருகை 90% ஆக உள்ளது என்றும், மாநில அரசு கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் மேற்கோள் காட்டியுள்ளார். கடந்த ஒரு […]

You May Like