fbpx

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்?… மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலை!… 1,066 பணியிடங்கள்!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரத்தினை இங்கே காணலாம்.

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board – MRB) அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது.தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம்வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Health Inspector Grade-II, மொத்த பணியிடங்கள் – 1,066.

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். ஊதிய விவரம்: இந்தப் பணியிடத்திற்கு ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Pay Matrix Level-11) இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 – ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ – என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023 ஆகும்.

Kokila

Next Post

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர்‌ திறந்து விட முடியாது...! விடாப்பிடியாக கர்நாடக அமைச்சர்...!

Sun Jul 16 , 2023
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் செல்வராயசாமி தெரிவித்துள்ளார். மத்திய நீர்‌ மேலாண்மை ஆணையத்தில்‌ நடந்த கூட்டத்தில்‌, கர்நாடகாவில்‌ இருந்து தண்ணீர்‌ திறந்து விடும்படி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால்‌ மழை பற்றாக் குறையால்‌, கர்நாடகா மாநிலத்திற்கு குடிநீர்‌ பிரச்னை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் போதுமான ‌தண்ணீர்‌ இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையில்‌ தண்ணீர்‌ திறந்து விட முடியாது என விவசாய அமைச்சர் […]

You May Like