fbpx

POCSO Act: காதல் உறவு வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை கூடாது…! போலீசாருக்கு அதிரடி உத்தரவு…!

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது; அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.

இது குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; உயர்‌ நீதிமன்றத்தின்‌ சிறுவர்‌ நீதிக்‌ குழு மற்றும்‌ போக்சோ குழுவினர்‌ போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல்‌ வன்முறை தடுப்புச்‌ சட்டம்‌) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும்‌ அதிகாரிகளுக்கு கிழ்கண்ட அறிவுரைகள்‌ வழங்கியுள்ளனர்‌. அதன்படி கிழ்காணும்‌ அறிவுரைகள்‌ புலன்‌ விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

திருமண உறவு, காதல்‌ உறவு போன்ற போக்சோ வழக்களில்‌ அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41(4) ன்‌ படி சம்மன்‌ அனுப்பி எதிரிகளை எதிர்‌ மனுதாரரை விசாரனை செய்யலாம்‌. குற்றம்‌ சாட்டப்பட்டவர்‌ கைது செய்யப்படாத விவரம்‌ வழக்கு கோப்பில்‌ பதிவு செய்தும்‌, அதற்கான காரணத்தையும்‌ பதிவு செய்ய வேண்டும்‌.

குற்றவாளியின்‌ மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால்‌மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ நிலை அதிகாரிகளின்‌ அனுமதியின்‌ பேரில்‌மட்டுமே கைது செய்யப்படவேண்டும்‌. முக்கிய வழக்குகளில்‌, இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை)உயர்‌அதிகாரிகள்‌ ஆய்வு செய்ய வேண்டும்‌. அதுவும்‌ குறிப்பாக மேல்‌ நடவடிக்கைகைவிடும்‌ வழக்குகளில்‌ வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரியஅறிவுரைகள்‌ வழங்கவேண்டும்‌.

இந்த அறவுரைகளை மாநகர காவல்‌ ஆணையர்கள்‌ மற்றும்‌ மாவட்ட கண்காணிப்பாளர்கள்‌ கண்டிப்பாக பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மக்களே உஷார்!!! சென்னையில் போலி பட்டா மற்றும் அரசு ஆவணங்களை தயாரிக்கும் கும்பல்..!

Mon Dec 5 , 2022
சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு, அரசுத்துறை ஆவணங்களை போலியாக தயார் செய்ததாகவும், நிலம் குறித்த ஆவணங்களை பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் வட்டாட்சியர் ராஜசேகர் புகார் வழங்கியுள்ளார். இந்த புகாரினடிப்படையில் அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஸ்வரா நகரை சார்ந்த வின்சென்ட்(85), அம்பத்தூர் சோளம்மேடு பகுதியைச் சார்ந்த பினு(41) உள்ளிட்ட 2 பேரையும் போலி ஆவணங்களை தயார் செய்தபோது கையும், களவுமாக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் […]

You May Like