திருநெல்வேலி மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணியிடம் : உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி – 9
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
Read more ; ஐ லவ் யூ டீச்சர்.. என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? – ஆன்லைன் வகுப்பில் மாணவன் செய்த செயல்..!!