fbpx

பெற்றோர்கள் கவனத்திற்கு..! செட்டாப் பாக்ஸை இழுக்க முயற்சித்த குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரழப்பு…!

டிவி அருகில் இருக்கும் செட்டாப் பாக்ஸை இழுத்து கையில் வைக்க முயற்சித்த குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தந்தையுடன் 4 வயது சிறுவன், வீட்டில் உள்ள டிவியில் கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தபோது அசதியில் தந்தை தூங்கியிருக்கிறார், மகிழ்ச்சியுடன் டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை, ஒருகட்டத்தில் டிவி அருகில் இருந்த செட்டாப் பாக்ஸை கை வைத்து இழுத்தபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளான். சிறிது நேரம் கழித்து சிறுவன் தரையில் மயங்கிக் கிடப்பதைக் கவனித்த தந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்,

செட்டாப் பாக்ஸை இழுக்க முயற்சித்து மின்சாரம் தாக்கி, குழந்தை பலியான சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kathir

Next Post

15-ம் தேதி காலை 11 மணி முதல் கிராம சபைக் கூட்டம்...! என்னென்ன செய்ய வேண்டும்..? ஆசிரியர் உத்தரவு...

Sat Aug 12 , 2023
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் […]

You May Like